வியாழன், 26 மார்ச், 2009

நெல்லை மாநகராட்சி முற்றுகை

குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி நெல்லை மாநகராட்சி முற்றுகைதிருநெல்வேலி மாநகராட்சி 29வது வார்டு மேலப்பாளையம் பகுதிக்கு உட்பட்ட ஹாமீம்புரம் 1 முதல் 12 தெருக்களுக்கு கடந்த 1 மாதமாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் குடிநீருக்காக சிரமப்பட்டனர். இந்நிலையை போக்கக் கோரி நெல்லை மாநகராட்சியை 21.03.2009 அன்று காலை தமுமுக மாவட்ட தலைவர் மைதீன் பாருக் தலைமையில் சுமார் 100க்கும் மேற்ப்பட்ட பெண்கள் திரண்டு வந்து மாநகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்தனர். இப்பகுதியில் இரண்டு தினங்களில் குடிநீர் பைப்புகள் சரி செய்யப்படும் என்றும் அதுவரை இப்பகுதிகளுக்கு லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றும் கமிஷனர் உறுதியளித்தார்.அப்போது மாவட்ட துனை தலைவர் கே.ஸ்.ரசூல் மைதீன், மாவட்ட செயலாளர் உஸ்மான் கான், மேலப்பாளையம் நகர தலைவர் மைதீன் பாதுஷா, செயலாளர் காசீம் பிர்தௌசி,பொருளாள‌ர் காஜா, 29வது வார்டு, செயலாளர் பி.செய்யது அப்துல் காதர், தலைவர் கபூர், பொருளாளர் ஞானியார், துனை செயலாளர் சுல்தான், துனை தலைவர் அஜீஸ், மருத்துவ அணி செயலாளர் எ.கே.அப்துல் கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: