வியாழன், 2 ஏப்ரல், 2009

தென்காசியில் மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்:-

மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்:
தென்காசி, ஏப். 1:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் மனித நேய மக்கள் கட்சியினர் புதன்கிழமை ஒற்றைக் காலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி நகராட்சிக்கு உள்பட்ட 9-வது வார்டு பகுதியில் மவுண்ட்ரோடு சாலையை புதுப்பிக்கும் பணிகளை உடனடியாக தொடங்கக் கோரியும், இப் பகுதியில் தெருவிளக்குகள் நீண்ட நாள்களாக எரியாததைக் கண்டித்தும், புதுப்பிக்கப்பட்ட, சுகாதார வளாகத்தைத் திறக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகர்மன்ற உறுப்பினரும் கட்சியின் ஒன்றியச் செயலருமான முகம்மது மைதீன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட துணைத் தலைவர் தங்கப்பா, கட்சியின் மாவட்ட துணைச் செயலர் சலீம், நகரச் செயலர் சலீம், பொருளாளர் சுலைமான் சேட், துணைச் செயலர்கள் சாகுல், திவான்ஒலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முடிவில் நகராட்சி அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.
செய்திகள் : நெல்லை உஸ்மான்

கருத்துகள் இல்லை: