செவ்வாய், 21 ஏப்ரல், 2009

குவைத் ரிக்கா பகுதியில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது:-

17.04.2009 வெள்ளி:-
குவைத் ரிக்கா பகுதியில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் தலைமையிலான சமூக ஜனநாயக கூட்டணிக்கு ஏன்? வாக்களிக்க வேண்டும் என்ற தலைப்பில் குவைத் ஃபாஹஹீல் துனை மண்டல பகுதியான ரிக்கா பகுதியில் தமுமுக மற்றும் பிற சமுதாய சகோதர சொந்தங்களை வர வழைத்து மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு மாயவரம் ஆடிட்டர் சாஹுல் ஹமீது தலைமை தாங்கினார்.மண்டல தமுமுக செயலாள‌ர் ஷாநவாஸ் திருக்குர் ஆன் வசனம் ஓதி தொடங்கி வைத்தார்.அய்யம் பேட்டை ஜெ.ஜாபர் அலி முன்னிலை வகித்தார்.ரிக்கா தமுமுக தலைவர் ஏ.சாதிக் வரவேற்று பேசினார்.
குவைத்தில் முதன் முறையாக:-
குவைத் தமுமுக வின் நான்கு வருட செயல்பாடுகளில் முதன் முறையாக‌ தமிழகத்திலிருந்து தமுமுக மாநில பேச்சாளர் சகோ:கோவை செய்யது அவர்கள் அலைபேசி மூலம் சிறப்புரையாற்றினார்.
குவைத் இஸ்லாமிய அழைப்பாளர்:-
புலவர்,டாக்டர் சாகுல் ஹமீது ஆலிம் அவர்களும் பேசினார்கள்.கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜமாத்தார்களையும் கூட்டனி தோழமை கட்சியினரை வைத்தும் சமூக நல ஆர்வலர்களையும் அழைத்து மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்திற்க்கு மக்கள் தொடர்பாளர் தஞ்சை அக்பர் பாட்ஷா, ஃபாஹஹீல் மண்டல தமுமுக செயலாளர் அ.அப்துல் வாஹித் மேலப்பாளையம், அற‌ந்தாங்கி அப்துல் அஜீஸ், சாதிக், புதுக்கோட்டை முஜிப்பூர் ரஹ்மான், குவைத் சிட்டி மண்டல தலைவர் நா.பீர்மரைக்காயர், சத்ருத்தீன், மற்றும் பெரும்பாலன மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முடிவில் கிளை பொருளாளர் வி.சாதிக் திருவாரூர் நன்றி உறையாற்றினார். இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.
செய்திக‌ள்:நா.பீர்மரைக்காயர். துனை ம‌ண்ட‌ல த‌லைவ‌ர்.

கருத்துகள் இல்லை: