சென்னை அறிவியல் விழா 2009 என்ற நிகழ்ச்சியில் திண்டுகல் மாவட்டம் நாகல் நகரைச் சேர்ந்த ஃபவுஸுல் ஹிதாயா முஸ்லிம் மாணவி மாநில அளவிலான அறிவியல் சார்ந்த போட்டியில் செயற்கைகோள் மாதிரி தயாரித்து சாதனை படைத்தார். போட்டியில் மாநிலத்தில் மூன்றாமிடம் பெற்று பரிசுப் பெற்றுள்ளார். திண்டுகல் நாகல் நகரில் உள்ள அண்ணாமலையார் மகளிர் மேல்நிலை பள்ளியில் பயிலும் முஸ்லிம் மாணவி சென்னையில் நடந்த சென்னை அறிவியல் விழா 2009 என்ற நிகழ்ச்சியில் மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் மூன்றாமிடம் பெற்றார்.அண்ண பல்கலைக் கழகம் சென்னை விவேகானந்தர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி. பரிசளித்து சான்றிதழ் வழங்கினார்.இது குறித்த தகவல் கிடைத்ததும் அந்த மாணவியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து செய்திகள் கேட்டறிந்தோம்.இது குறித்து அந்த மாணவி கூறுகையில் பள்ளி ஆசிரியர்கள் நல்ல பாராட்டுவார்கள் ஊக்கமளிப்பார்கள் என்றார். அவர் படிக்கும் பள்ளியில் இவர் சிறந்த மாணவியாகவும் அதிக மதிபெண் எடுக்கும் மாணவியாகவும் பள்ளி ஆசிரியர்களின் பாராட்டுகளை எப்போதும் பெற்று வருவதாகவும் குர்ஆன் ஓதி தொழுகையை பேனுவதாகவும் அவர் தாயார் தெரிவித்தார்.மாணவியின் தந்தை அபுல் அன்ஸர். குவைத்தில் பனிபுரிகிரார். மற்றும் இறு சகோதரிகள் உள்ளனர்.
ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக