சனி, 14 மார்ச், 2009

ரிக்ஃகா பகுதியில் புதிய தமுமுக கிளை துவக்கப் பட்டது.

வெள்ளி, March 13, 2009
குவைத் மண்டலம், ரிக்ஃகா பகுதியில் புதிய தமுமுக கிளை துவக்கப் பட்டது.
நிகழ்ச்சியை ஷாநவாஸ்.கிராத் ஓதி தொடங்கிவைத்தார்.
ஜாஃபர் அலி . வரவேற்புரை ஆற்றினார். குவைத் மண்டல செயலாளர் ஷா நவாஸ் தலைமை தாங்கினார், துணை மண்டல பொருளாளர் அப்துல் அஜீஸ் முன்னிலை உரையில் மக்கள் உரிமை பத்திரிகையின் அவசியம் குறித்து பேசினார்.துணை மண்டல செயலாளர் அ.அப்துல் வாஹித், கிளையின் செயல்பாடுகள் குறித்து பேசினார். சிட்டி துணை மண்டலத் தலைவர் நா.பீர் மரைக்காயர், தமுமுக கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் பேசினார். பின்பு கிழ்கண்ட வாரு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டார்கள். கிளைத் தலைவராக கொள்ளிடம் தைக்கால் A.சாதிக், கிளைச்செயலாளராக‌ அய்யம்பேட்டை ஜாஃபர் அலி, பொருளாளராக திருவாரூர். V.சாதிக்.ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.ரிக்ஃகா கிளைத்தலைவர் நன்றி உரையாற்றினார்.
இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.

கருத்துகள் இல்லை: