புதன், 7 ஜனவரி, 2009

புதிய மறுமலர்ச்சிக்கான‌ அழைப்பு:-

ஜனவரி 2, 2009 அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், குவைத் மண்டலம் சார்பாக ஏற்பாடு செய்யப் பட்ட “தேசம் நாமே என்போம்” என்ற நிகழ்ச்சி: மாலை 4.00 மணிக்கு தொடங்கப் பட்டது. தமிழ் முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின்(TMCA) முன்னால் தலைவரும், ஃபிமா (Federation of Indian Muslim Associations) என்ற அமைப்பின் முன்னால் செயலாளரும், ஆக இருந்த சகோ.டானா முஹம்மது இக்பால் அவர்கள் தலைமையில், தமுமுக-குவைத்தின் செயலாளர், பொறியாளர். ஷாநவாஸ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். ஐ.ஜி.சி [I G C] மாணவர் ஜாஸிம் அப்துல் லத்தீஃப் சூரா இஃலாஸ் ஓதி, ஏகத்துவத்தை கூற, நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. தமுமுக குவைத் மண்டல பத்திரிக்கை செயலாளர், சகோ. பெருங்களூர்-முஜிபுர் ரஹ்மான் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். சகோ.டானா இக்பால் பாலஸ்தீனத்தைப் பற்றியும், இந்திய முஸ்லிம்களின் இன்றைய அவல நிலை பற்றியும் எடுத்துச் சொன்னார்கள். “ நமது தேசம்; நாமே காப்போம்” என்ற தலைப்பில் பேராசிரியர். சுப.வீரபாண்டியன்.அவர்கள் உரையாற்றினார்கள். “ வேண்டும் மறுமலர்ச்சி” என்ற தலைப்பில் சகோ.எம்.தமீமுன் அன்ஸாரி உரையாற்றினார். சகோ.எம்.தமீம் அன்ஸாரி பாலஸ்தினப் படுகொலைகளைப் பற்றிய பேச்சு அனைவரது சிந்தனையையும் தூண்டும் விதமாக அமைந்தது. இறுதியில் தமுமுக வின் செயல்பாடுகள், பணிகள், எதிர்காலத் திட்டங்களைப் பற்றிய கேள்விகளுக்கு மிக நேர்த்தியான பதில்களைக் கூறி அனைவரது பாராட்டுதலையும் பெற்றார். தமிழோசை சகோ.இராவணன் பேசுகையில், அடுத்த தடவை சகோ.எம்.தமீமுன் அன்ஸாரி ஒரு இந்திய அரசின் மத்திய அமைச்சராக குவைத்திற்கு வரவேண்டும் என்று கூறியது, குவைத்தில் தனது 4 நாட்கள் நிகழ்ச்சிகளில் சகோ.எம்.தமீமுன் அன்ஸாரி ஏற்படுத்திய தாக்கத்தை அனைவராலும் உணர முடிந்தது. தமிழர் சமூக நீதிப் பேரவையின் சார்பாக ரூபாய் 10000/- காசோலையை ஃபிப்ரவரி 7 அரசியல் கட்சி மாநாட்டிற்காக சகோ.பெரம்பலூர் ரஹ்மத்துல்லாஹ் வழங்கினார். சகோ.வெட்டுகட்டி மஸ்தான் சிறிய கவிதை ஒன்றைப் படித்தார். விடுதலைச் சிறுத்தைகள் - குவைத் பிரிவின் சார்பாக இரு விருந்தினர்களுக்கும் பொன்னாடை போர்த்தப் பட்டு, சகோ.தொல்.திருமாவளவன் எழுதிய ஒரு புத்தகம் நினைவு பரிசாகக் கொடுக்கப் பட்டது. நிகழ்ச்சிகளின் இறுதி தொகுப்பாக புரவலர் எஸ்.கே.எஸ் அவர்கள் குவைத் வாழ் தமிழ் சமுதாயம் இந்த தருணத்தில் என்ன செய்ய வேண்டும் என்று மக்களை சிந்தனையை தூண்டும் விதமாக பேசினார்.மக்கள் தொடர்பாளர், சகோ.தஞ்சை-அக்பர் பாஷா அவர்கள் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சி 4.15 - 8.40 வரை இனிதே நடந்து முடிந்தது.
ஆதரவாளர்களுக்கும், விருந்தினர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப் பட்டது. பேராசிரியர்.சுப.வீரபாண்டியன் அவர்களுக்கு சகோ.அன்வர் அலி - தமிழர் சமூக நீதிப் பேரவை.சகோ.எம்.தமீமுன் அன்ஸாரிக்கு தமுமுக குவைத்தின் மண்டலப் பொருளாளர் ஃபஜ்லுர் ரஹ்மான் சாதியா நிறுவனத்தார்க்கு சகோ.இஸ்மாயில் - செயலாளர் துணை மண்டலம். TVS ஹைதர் அலிக்கு துணை மண்டலம் பொருளாளர். அப்துல் அஜீஸ்.
டானா முஹம்மது இக்பாலுக்கு துணை மண்டலச் செயலாளர்-
அ.அப்துல் வாஹித். பரிசை வழங்கினர்...
ம்ற்றும் அனைத்து நிர்வாகிகளும் இரவு பகலாக செயல்ப்பட்டு நிகழ்ச்சியை சிறப்புர செய்தனர்..

கருத்துகள் இல்லை: